கொத்து கொத்தாய் பூத்திருந்த
மஞ்சள் நிறப் பூக்களோடும்
நீண்டு வளர்ந்த
கறுப்பு நிற காய்களோடும்
கொஞ்சி மகிழ்ந்து
அசைந்து கொண்டிருந்த
மரம்
இன்று காலை
யாவற்றையும் இழந்து
தன் காலடியில்
சிதறி விழுந்த இதழ்களையும்
முறிந்து கிடக்கும் காய்களையும்
பதறிப் போய் அசையாமல்
நிழலற்று பார்த்துக்கொண்டிருக்க
மகிழ்ச்சி கொள் மரமே
உனது பூக்களெல்லாம்
கடவுள் திருவடி அடைந்தது
என்று சொல்லி தேற்றவோ
சித்திரைக்கனிக்கு
இந்தப் பூ வேண்டும் என்று
பக்தனிடம் ஆணையிட்ட
கடவுளிடம் வாதிடவோ
முடியாமல்
கவிதை எழுதி கடக்கிறேன்
இருவரது மொழிகளும்
தெரியாததால்
உனது பூக்களெல்லாம்
கடவுள் திருவடி அடைந்தது
என்று சொல்லி தேற்றவோ
சித்திரைக்கனிக்கு
இந்தப் பூ வேண்டும் என்று
பக்தனிடம் ஆணையிட்ட
கடவுளிடம் வாதிடவோ
முடியாமல்
கவிதை எழுதி கடக்கிறேன்
இருவரது மொழிகளும்
தெரியாததால்
No comments:
Post a Comment