உலகப் புத்தக தினம் யுனெஸ்கோ-வால்
அறிவிக்கப்பட்டு 1995 லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம்
தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஷேக்ஸ்பியர் மற்றும் பல முக்கிய
எழுத்தாளர்களின் பிறந்த / இறந்த நாள் என்பதாலேயே இந்த தினம் தேர்வாகியுள்ளது.
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு (23-04-2016) வாசித்தலை
மேம்படுத்தும் வகையில் புதிய போட்டியை கொலுசு மின்னிதழ் அறிவிக்கிறது.
போட்டி விபரங்கள்:
- தங்களைக் கவர்ந்த கவிதை, கதை, நாவல், கட்டுரை என்று எந்த வகை நூலாக இருந்தாலும் அந்த நூலைப் பற்றிய சுருக்கமான விமர்சனத்தை அனுப்பலாம்.
- தேர்வாகும் அனைத்து சிறந்த விமர்சனங்களும் புத்தகப் பரிசினைப் பெறும்.
- வாசகர்கள் ஆர்வமாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
- பள்ளி கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
- விமர்சனங்களை அனுப்ப : kolusu.fb@gmail.com
- விமர்சனங்கள் கிடைக்கப் பெற கடைசி தேதி : 15-04-2016
குறிப்பு :
நூல் விமர்சனப் போட்டியில் தேர்வாகும் கட்டுரைகளுக்கு பரிசளிக்க
விரும்பும் ஆர்வலர்கள் புத்தகப் பரிசினை அளிக்கலாம். அவை பரிசு வழங்குபவர்
பெயரிலேயே வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.
புத்தகங்களை பரிசளிப்போர் பட்டியலில் இணைந்துள்ள தற்போதைய ஆர்வலர்கள்
:
- புன்னகை செ. இரமேஷ் குமார்
- ஆன்மன்
- படிகள் அறக்கட்டளை
- கெளதம் நாராயண் (Infinity Trust)
- சோலை மாயவன்
புத்தகங்களை பரிசளிப்போர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள கீழ்க் கண்ட
நபர்களைத் தொடர்பு கொள்ளவும்.
க. அம்சப்ரியா - 9095507547
மு. அறவொளி - 9486105615
இரா. பூபாலன் - 9842275662
No comments:
Post a Comment