“சித்தப்பா .... நீங்க நூலகம் தொடங்குறீங்கலாமே. மாப்பிள்ளை போன்
பண்ணி சொன்னாங்க. அதற்கு நானும் ஏதாவது செய்கிறேன்“ என்று சொன்னார் என் அண்ணன்
மகள் பிரியா இளங்கோவன்
“ஏம்மா .... நான் செய்தாலென்ன .... நீ செய்தாலென்ன ... எல்லாம்
ஒன்று தானே “ என நான் எவ்வளோவோ மறுத்தும், “மாப்பிள்ளை புதிய புத்தகங்களை வாங்கி கூரியர்
மூலம் தான் அனுப்பச் சொன்னார்கள். உங்களுக்குத் தான் தெரியுமே. கைக் குழந்தையை
வைத்துக் கொண்டு என்னால் தனியாய் டவுனுக்குப்
போய் இதெல்லாம் முடியாது. கொலுசுக் குட்டிக்கு உங்கள் பேத்தி பெயரில் (மானஷிகா இளங்கோவன்) புத்தகங்கள் வாங்கி வையுங்கள்”
என பிடிவாதமாய் ஐநூறு (500) ரூபாயை எனது வங்கி எண்ணுக்கு அனுப்பி
உள்ளார்கள்..
“நன்றி பிரியா...“ விரைவில் தங்களின் அன்பு மகளும், எனது
பேத்தியுமான மானஷிகா இளங்கோவன் அவர்களின்
பெயரில் புத்தகங்கள் வாங்கி கொலுசு நூலகத்தில் வைக்கப்படும்.


No comments:
Post a Comment